போடு தகிட தகிட..! - விஜய், விக்ரம், ஷங்கர் இணையும் மெகாபட்ஜெட் படம்.! - அதிரும் கோலிவுட் - ரசிகர்கள் கொண்டாட்டம்

பிரம்மாண்டமாக படம் எடுத்து பழக்கப்பட்ட இயக்குநர் ஷங்கர், சமீபத்தில் நடிகர் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து, பிரம்மாண்டமான 2.0 படத்தை எடுத்து உலகம் முழுவதும் ரிலீஸ் செய்தார். அந்தப் படமும் வசூலில் சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து, நடிகர் கமலை வைத்து, இந்தியன் 2 படத்தை இயக்கினார். இதற்கான படபிடிப்பு, பொள்ளாச்சியில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடந்தது. இதற்காக, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் மேக்கப் மேன்கள் வரவழைக்கப்பட்டனர்.

ஆனால், இந்தியன் 2 பட சூட்டிங், தொடர்ந்து நடக்கவில்லை. நடிகர் கமல், அரசியல்வாதியாகி, அவரது கட்சி தேர்தலில் போட்டியிட்டதால், அந்த வேலையைப் பார்க்க அவர் சென்று விட்டார். இதனாலும், பட சூட்டிங் நிறுத்தப்பட்டது. படம் எப்போது, மீண்டும் துவங்கும் என சொல்ல முடியாத நிலையில், இயக்குநர் ஷங்கர் தான் ஏற்கனவே பேசி முடித்து வைத்திருக்கும் நடிகர்கள் விக்ரம் மற்றும் விஜய்யை வைத்து படம் இயக்கும் யோசனைக்கு வந்து விட்டார்.

இதற்காக, நடிகர் விஜய் மற்றும் விக்ரமிடம் பேசி வருகிறார் ஷங்கர். ஷங்கர் படத்தில் இருவரும் நடிக்க ஒப்புக் கொண்டு, இருவரும் இணைந்து நடிக்கும் மெகா படமாக விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை கொண்டாடத்தில் ஆழ்த்தியுள்ளது.
Powered by Blogger.