பஸ் டே என்ற பெயரில் அராஜகம் - சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்த மாணவர்கள்..! - அதிர்ச்சி வீடியோ
தமிழக தலைநகராம் சென்னையில் கல்லூரி தொடங்கிய நாளிலேயே கல்லூரி மாணவர்கள் பேருந்து தினம்
என்ற பெயரில் மாநகர பேருந்துகளை சிறைபிடித்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டனர்.
ஒரு பேருந்தின் மீது சுமார் 100 மாணவர்கள் மேற்கூறையின் மீது நின்றபடி பயணம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர். ஒரு தருணத்தில் பேருந்து ஓட்டுனர் ப்ரேக் போட, மேலே இருந்த மாணவர்கள் சீட்டுக்கட்டு போல கீழே சரிந்து விழுந்தனர்.
தகவல் தெரிந்து அங்கே சென்ற காவல்துறையினரை பார்த்ததும் எல்லா மாணவர்களும்
ஓட்டம் பிடிக்க சிக்கிய 13 பேருக்கு அட்வைஸ் சொல்லி அனுப்பி வைத்தது
காவல்துறை.
இப்படி வரம்பு மீறி அட்டகாசத்தில் ஈடுபட்டால் எதிர்காலத்தில்
வேலைவாய்ப்பில் சிக்கல் ஏற்படும் என மாணவர்களை எச்சரித்து அனுப்பியது
காவல்துறை.
என்ஜாய்மென்ட் என்ற பெயரில் தங்களுடையே உயிருக்கேவினையாக முடியும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை என்னத்த சொல்ல..! எப்படியோ போய் தொலைங்க என விட்டு விடவேண்டியது தான் என்று புலம்புகிறார்கள் அந்த பகுதி மக்கள்.