பவானி சாகர் : குலை நடுங்க வைக்கும் கோர விபத்து - ஒருவர் பலி - அதிர்ச்சி வீடியோ


சமீப காலமாக வாகன விபத்துகள் சாலை விதிகளை மீறும் வாகனங்களால் தான் ஏற்படுகின்றன. நாம் ஒழுங்காக வண்டி ஒட்டிக்கொண்டு சென்றாலும் எதிரில் வருபவன் ஒழுங்காக வரவில்லை என்றால் நாமும் தான் சேர்ந்து பாதிக்கபடுவோம். 

இப்போதெல்லாம், வேகமாக சென்றால் தான் கெத்து என்ற பெயரில் இளைஞர்கள் பலர் ரேஸிங் போன்ற விளையாட்டுகளை சாதாரண சாலையில் செய்கின்றனர். 

இதனால், கணிசமான உயிர் பலிகளும் நடக்கின்றன. நாங்கள் ஸ்பீடாக போனாலும் எங்களால் கட்டுப்படுத்த முடியும் உங்களுக்கு என்ன பிரச்சனை..? என சில பதறுகள் டிக் டாக் வீடியோவில் பிதற்றிக்கொண்டிருகிறார்கள்.

யாரை சொல்லி என்ன பண்ண..? நம்ம டைம் வந்துட்டா போய் சேர வேண்டியது தான் என நம்மை நாமே சாமாதானம் படுத்திக்கொண்டிருக்கிறோம்.  உண்மையில் சாலை விதிகளை மீறாமல் எல்லோரும் பயணம் செய்யும் பட்சத்தில் விபத்துகள் நடப்பது குறையும்.  

இதில் ஒரு கூட்டம் சாலைகள் மீது பழியை தூக்கி போடுகிறார்கள். குண்டும் குழியுமான சாலைகளிலும் நாம் தான் பாதுகாப்பாக போக வேண்டும். உயிர் நம்முடையது. ஒருவரை இழந்துவிட்டு பிறகு அரசையோ, அதிகாரிகளையோ திட்டி பாட்டு பாடுவதில் ஒரு பயணும் இல்லை. இப்படித்தான், லாரியில் அதிக கனம் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் ஒரு வளைவில் வண்டியை திருப்பினார் ஒரு ஓட்டுனர். உயிரிழந்தது என்னவோ ஒரு அப்பாவி ஜீவன்.பாதிக்கப்பட்டதுஅவரது குடும்பத்தினர். 

அந்த வீடியோவை கீழே பாருங்க..
Powered by Blogger.