தினமும் உறவுக்கு அழைத்த கணவர் - மனைவி செய்த கொடூரத்தை பாருங்க..! - அதிர்ச்சி தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அருகேயுள்ள நொச்சிலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர், தினமும் மதுபோதையில் இரவில் வீட்டுக்கு வந்து அவரது மனைவி முனியம்மாளை உறவுக்கு அழைத்து அடித்து கஷ்டப்படுதியுள்ளார். 

இந்நிலையில், ஒருநாள் திடீரென தனது கணவருக்கு உடல்நலமில்லை என்று கூறி அவரை ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார் முனியம்மாள். பின்னர் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாகாவும் கூறி கமுக்கமாக இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார். 

முருகேசனின் இறுதிச்சடங்கிற்கு வந்த உறவினர்கள் அவருடைய கழுத்தில் காயம் இருப்பதை பார்த்ததும் எப்படி இறந்தார் என்று கேட்டு சண்டையிட்டுள்ளனர். மேலும், இவரை கொலை செய்துள்ளனர் என்ற சந்தேகம் அடைந்து உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். 

போலீசார் விரைந்து வந்து முனியம்மாளை விசாரணை செய்தபோது தனது கணவர் முருகேசன் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை கொடுமை செய்ததால் தனது அண்ணனின் உதவியுடன் கணவரை கொலை செய்து பிணத்தை பிரிட்ஜில் வைத்ததாகவும், அதன்பின்னர் அவர் இறந்து விட்டதாக பொய் சொல்லி ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

முனியம்மாளிடம் வாக்குமூலத்தை பெற்ற போலீசார் அவரை கைது செய்து இதுகுறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
Powered by Blogger.