இரண்டாவது கணவருடன் உல்லாசம் - தடையாக இருந்த 4 வயது மகனுக்கு தாய் கொடுத்த பரிசு..!


இரண்டாவது கணவனுடன் சந்தோஷமாக இருப்பதற்கு முதல் கணவருக்கு பிறந்த தனது 4 வயது மகன் தடையாக இருந்ததால் அவனைக் கொலை செய்த தாயும், அவருடன் இருந்த கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளது கல் நெஞ்சத்தையும் கனக்க செய்துள்ளது.

தேனி மாவட்டம் கோம்பை மதுரைவீரன் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கீதா இவருக்கு வயது 23 ஆகின்றது. இவர்களுக்கு நான்கு வயதில் ஹரிஷ் என்ற மகன் உள்ளார். 

இந்நிலையில், இரண்டு வருடத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இந்த தம்பதிகள் ஆளாளுக்கு தனித்தனியாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். 


மனைவி கீதா உதயகுமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து ஒரு வயதில் பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இரண்டாவது திருமணத்திற்கு பின்பு முதல் கணவருக்கு பிறந்த மகன் ஹரிஷை தனது தாய் வீட்டில் விட்டிலேயே வைத்துள்ளார். 

சிறிது காலம் வேறு இடத்தில வசிந்து வந்த கீதாவும் உதயகுமாரும் கீதா-வின் தாய் வீட்டின் அருகே குடிபெயர்ந்துள்ளார். தனது தாய் பாட்டியின் வீட்டிற்கு அருகே வந்ததால் மகிழ்ச்சியில் ஹரிஷ் தாய் வீட்டிற்கு அடிக்கடி செல்வதுடன் அவர்களுடன் இரவு நேரத்தில் தங்கவும் செய்துள்ளான். 

இதனால், கீதாவும், உதயகுமாரும் எரிச்சலில் காணப்பட்டுள்ளனர். இதனிடையே கீதாவின் தங்கை புவனேஷ்வரி என்பவர் ஆட்டோ ஓட்டுனரான கார்த்திக் என்பவரை திருமணம் செய்துள்ளார். 

கார்த்திக் அடிக்கடி கீதா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் கீதாவும், கணவர் உதயகுமாருடன் தனிமையில் இருந்து வந்ததை நான்கு வயது மகன் ஹரிஷ் பார்த்து விட்டதால் அவனை சாப்பாடு கொடுக்காமல் வெளியே விட்டு கதவை அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். 

ஒரே ஒரு அறையைக் கொண்ட தனது வீட்டில் தன்னுடைய களியாட்டம் மகன் ஹரிஷால் பாதிக்கப்பட்டதால் கீதா தனது தங்கையையும், தங்கை கணவரையும் வரவழைத்து ஒன்றாக மதுவருந்திவிட்டு கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து ஹரீஷை வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு கோம்பை கால்நடை மருத்துவமனைக்கு எதிராக உள்ள மயானத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அந்தப் பகுதிக்கு சென்றவுடன் கார்த்திக்குமார் கம்பியால் ஹரீஷின் கழுத்தில் குத்தியும், பின்பு புவனேஸ்வரி அந்த சிறுவனின் கழுத்தை கத்தியால் அறுத்தும், பின்பு கீதாவின் இரண்டாவது கணவர் உதயகுமார் அங்கிருந்த செங்கலால் சிறுவனின் முகத்தை அடித்து சிதைத்துள்ளார். 

மேலும், கொலை செய்யப்பட்ட மகனின் தாய் கீதா சம்பவ இடத்திலிருந்து சற்று தூரம் தள்ளி நின்று ஆள் நடமாட்டம் எதுவும் உள்ளதா என்று கையில் தொலைபேசியுடன் கண்காணித்து கொண்டிருந்திருக்கிறார். 

கொலை செய்து முடித்ததும் புவனேஸ்வரியும் கார்த்திக்கும் தங்களது ஆட்டோவில் கம்பத்திற்கு சென்றுவிட்டனர் உதயகுமாரும் கீதாவும் ஒன்றும் தெரியாதது போல் அவர்களது வீட்டிற்கு வந்துவிட்டனர். 

ஒரு நாள் கழித்து, தனது மகனைக் காணவில்லை என்று போலிசில் புகார் கொடுக்க போலிசார் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். மறுநாள் காலை சிறுவன் சடலமாக கிடந்ததை தெரிந்துகொண்ட போலிசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

மகன் பிணமாக கிடந்ததை போலீசார் கீதாவிடம் சொல்லியுள்ளனர். அதனை தொடர்ந்து அவரது நடவடிக்கைகள் எதுவும் மகன் இறந்த துக்கமே இல்லாதது போல இருந்த காரணத்தினால், கீதாவை தீவிர விசாரணை பிரிவிற்கு கொண்டு சென்று விசாரித்துள்ளனர். பயந்து போன கீதா நான்கு பேரும், குழந்தையை அடித்து கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது, நான்கு பேரையும் சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.
Powered by Blogger.