யாரும் எதிர்பார்க்காத கூட்டணி - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!


இசைப்புயல் ஆர்.ரகுமான் தற்போது நடிகர் விஜய்யின் "பிகில்" படத்திற்காக இசையமைத்து வருகிறார். அதனை தொடர்ந்து விக்ரமின் அடுத்த படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இந்நிலையில் , யாரும் எதிர்பார்க்காத விதமாக தற்போது நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு புதிய ப்ராஜெக்ட்டில் இணைவதாக கமல் போட்டோ வெளியிட்டுள்ளார். 

மேலும் அறிவிப்பு விரைவில் வரும் எனவும், லைகா நிறுவனம் இந்த பிரம்மாண்ட படத்தை தயாரிக்கிறது என ரகுமான் குறிப்பிட்டுள்ளார். அனேகமாக இந்தியன் 2 படத்தில் தான் இருவரும் இணையவுள்ளனர் என்று தெரிகின்றது.

ரஹ்மானின் இந்த பிரமாண்ட அறிவிப்பால் அவரது ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் இருகிறார்கள்.
Powered by Blogger.