மன்மதன், மஜா போன்ற படங்களில் நடித்த இளம் நடிகை சிந்து துலானியின் தற்போதைய பரிதாப நிலை..!


நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான "சுள்ளான்" என்ற திரைப்டம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிந்து துலானி. இந்த படத்தில் அம்மணியின் அறிமுக காட்சியே கலாய்ச்லாக இருக்கும். 

முதலில், தாவணி பாவாடை என அக்ரஹாரத்து பெண்ணாக தோன்றும் அவர் சிறிது நேரத்தில் நடுரோட்டில் உடைகளை கழட்டி வீசி மாடர்ன் உடைக்கு மாறுவார். சுள்ளான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை சிந்து துலானி. 


அதன்பின்னார் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படத்தில் நடித்தார் சிந்து துலானி. மன்மதன் படம் மாபெரும் வெற்றிபெற்றாலும் சிந்து துலானி பெரிய அளவில் பிரபலமாகவில்லை.அதன்பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி தெலுங்கு சினிமாவில் பிரபலாமானார். 


தமிழில் ஒருசில படங்களில் பாடல்களுக்கு மட்டும் நடனம் ஆடினார். விக்ரம், அசின் நடிப்பில் வெளியான மஜா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் சிந்து துலானி. 

இந்நிலையில், தன்னுடன் நடித்த சுரேந்தர் ரெட்டி என்ற நடிகரை காதலித்து லிவிங் டு கெதர் வாழ்கை வாழ்ந்து வந்த இவர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது. குழந்தை பிறந்த பிறகும் சில ஆண்டுகள் ஒற்றுமையாக இருந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரிந்து சென்றுவிட்டார். தற்போது, சிந்து துலானி என்ன செய்கிறார்..? எங்கு இருக்கிறார் என்று கூட தெரியவில்லை.
Powered by Blogger.