மனைவி நடத்தையில் சந்தேகம் -குடிபோதையில் கணவன் செய்த விபரீதம் - அதிர்ச்சி சம்பவம்..!


கடலூரில் உள்ள காட்டுமன்னார் கோவில் அருகே, மாளிகைமேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி அமலா. இவர்களுக்கு, கடந்த  ஐந்து மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. 

ஆனால், குழந்தையின் நிறம் சிவப்பாக இருப்பதை அடிக்கடி குறிப்பிட்டு, மனைவியின் நடத்தையை சந்தேகித்து சண்டை போட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. 


கடந்த செவ்வாய்கிழமையன்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியின் முகத்தில் தலையணையால் அமுக்கியதாகத் தெரிகிறது. இதில் அமலா மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். 


மனைவி இறந்ததை அறிந்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் ராஜன். இன்று காலை ராஜன் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வெகுநேரமாகியும் அமலா தூக்கத்தை விட்டு எழுந்திருக்கவில்லை. இதனால் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ராஜனை காணாததால், அமலாவை எழுப்ப முயற்சி செய்துள்ளனர். 

ஆனால் படுக்கையில் அவர் இறந்து கிடக்கவே, அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் அமலாவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ராஜனை தேடினர். 

அதற்குள் காட்டுமன்னார் கோவில் காவல் நிலையம் சென்ற ராஜன் மனைவியை நான் தான் கொலை செய்தேன் என போலீசில் சரணடைந்தார். 

மேலும், குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை தலையணையால் முகத்தில் அழுத்தி, கொலை செய்ததாக சுரேஷ் ஒப்புக்கொண்டிருக்கிறார்
Powered by Blogger.