மனைவியின் அக்கா-வை கர்ப்பமாக்கிய கணவன்..! - விளைந்த விபரீதம்..! - மதுரையில் பரபரப்பு சம்பவம்..!


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவியின் அக்காவிற்கு இன்னும் திருமணமாகவில்லை. 


இந்நிலையில், பாலமுருகனின் மனைவி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது பாலமுருகனுக்கு அவரது மனைவியின் அக்கா உதவியாக இருந்து வந்துள்ளார். இதனால், இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். 



ஒரு கட்டத்தில் பாலமுருகன் தனது மனைவியின் அக்காவை வற்புறுத்தி உறவு கொண்டுள்ளார். விளைவாக, அவர் கர்ப்பமடைந்துள்ளார். இதையறிந்த அவரது தந்தை, மருமகனை கண்டிக்காமல் மகளை கண்டித்துள்ளார். 

இதனால் மனமுடைந்த அவர், நேற்று விஷம் குடித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்த புகாரின் பேரில், சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Powered by Blogger.