வொர்க்அவுட் ஆகுமா SK-வின் இந்த செண்டிமெண்ட்..!
'இரும்புத் திரை' படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இசையில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'ஹீரோ'.
இந்தப் படத்தை நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த மார்ச் மாதம் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு தலைப்புடன் வெளியானது.
அதே சமயமத்தில் அதே 'ஹீரோ' என்ற பெயரில் விஜய் தேவரகொண்டா, மாளவிகா மோகனன் நடிப்பில் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகப் போவதாக அறிவித்தார்கள். ஒரே பெயரில் இரண்டு படங்களா என்ற சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிவுறும் கட்டத்தை நெருங்கிவிட்டது. தெலுங்கு 'ஹீரோ' படம் ஆரம்பமாகிய நிலையில் சில பிரச்சினைகளால் அப்படியே நிற்கிறது.
விஜய் தேவரகொன்டா, தற்போது நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகுதான் 'ஹீரோ' படத்தில் கலந்து கொள்ள உள்ளாராம். ஆனால், தமிழ் 'ஹீரோ' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெலுங்கு 'ஹீரோ'வுக்கு முன்னதாகவே வெளிவந்துவிடும். தெலுங்கு 'ஹீரோ' அடுத்த வருடம்தான் வெளியாகும் எனத் தெரிகிறது.
சீமராஜா, மிஸ்டர்.லோக்கல் என இரண்டு படங்களும் மண்ணை கவ்விய நிலையில் இந்த படத்தை எப்படியாவது ஹிட் ஆக்கிவிட வேண்டும். இல்லையென்றால், ஹாட்-ட்ரிக் ஃப்ளாப் கொடுத்த ஹீரோ என்ற பட்டத்தை தலையில் கட்டி விடுவார்கள் என்று மிகவும் கடினமாக உழைத்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
மேலும், கடந்த 2017-ம் வருடம் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகி ஹிட் அடித்த "வேலைக்காரன்" திரைப்படம் வெளியான ஆதே நாளில் தான் இந்த ஹீரோ படமும் வெளியாகவிருந்தது என்பது குறிப்பிடதக்கது.
ஆனால்,22-ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் இரண்டு நாள் முன்கூட்டியே வெள்ளிக்கிழமை 20-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். SK-வின் கிருஸ்துமஸ் செண்டிமெண்ட் வொர்க் அவுட் ஆகுமா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.