ரசிகர்களை கவர்ந்த நடிகை கோபிகா-வின் தற்போதைய நிலை - இதோ புகைப்படம்


மலையாள பெண்ணான நடிகை கோபிகா தமிழில் ஆட்டோகிராப் ஏன்னு படத்தின் மூலம் ரசிகர்களை கட்டி போட்டார். இதனையடுத்து இவர் கனா கண்டேன், தொட்டி ஜெயா மற்றும் எம்.மகன் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர். 

சுமார் முப்பதுக்கும் அதிகமான படங்களில் கதாநாயகியாக நடித்த கோபிகா கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். கடந்த 1985ம் ஆண்டு பிறந்த இவர் சிறுவயதிலிருந்தே பரத நாட்டியம் கற்றவர். மேலும் இவர் ஜோசியம் சார்ந்த படிப்பில் பட்டம் பெற்றிருந்தார். 


விமான பணி பெண்ணாக வேண்டும் என்று ஆசை கொண்டிருந்த இவர் பின்னர் நடிகையாக வலம் வரத் தொடங்கினார். கோபிகாவுக்கு கடந்த 2002ம் ஆண்டு பிரணயமணித்துவல் என்ற மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 


இந்நிலையில், இவர் கடந்த ஜூலை 17 ம் தேதி 2008-ம் ஆண்டு அஜிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதோடு இவர் சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கோபிகா குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். 

Powered by Blogger.