மதுமிதா மீது தொலைகாட்சி நிர்வாகம் பரபரப்பு புகார் - கைதாகிறாரா மதுமிதா.?


பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அதில், "விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். 


அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11,50,000 பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம். அதை ஒப்புக் கொண்டு சென்றார். 


பிறகு கடந்த 19-ம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக நடிகை மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார்.

பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் "தற்கொலை செய்து விடுவேன்" என்று மிரட்டி உள்ளார்" இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பபுகாரை பதிவு செய்கிறோம் என்று கூறுகிறார்கள்.

இதனை தொடர்ந்துதற்கொலை மிரட்டல் விடுத்த நடிகை மதுமிதா கைது செய்யப்படுவாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Powered by Blogger.