ரசிகர்கள் செயலால் கடுப்பான நடிகர் விஜய் சேதுபதி..!


விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கு ‘துக்ளக் தர்பார்’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் கதாநாயகியாக அதிதிராவ் மற்றும் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கின்றனர். 

இந்த படத்தின் தொடக்க விழா பூஜை சென்னை வடபழனியில் நடந்தது. இதில் விஜய்சேதுபதி கலந்து கொண்டார். அவருக்கு ரசிகர்கள் சாலையில் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளித்தனர். 


இதனால் போக்குவரத்து பாதித்தது. பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விழாவில் பேசிய விஜய் சேதுபதி சாலையில் பட்டாசு வெடித்து இடையூறு செய்த ரசிகர்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.


அவர் கூறியதாவது, இந்த விழாவுக்கு நான் வந்தபோது வரவேற்பு அளிப்பதற்காக சாலையில் வாகனங்களை நிறுத்தி பட்டாசுகள் வெடித்தனர். அதை பார்த்து வருத்தப்பட்டேன். பொதுமக்களுக்கு இடையூறு செய்து இதுபோல் பட்டாசுகள் வெடிப்பது எனக்கு பிடிக்காத விஷயம். 

பட்டாசுகள் வெடித்து ஏன் காசை கரியாக்குகிறீர்கள்?. இதனால் போக்குவரத்து பாதிப்பதோடு சுற்றுப்புறத்திலும் மாசு ஏற்படுகிறது. பட்டாசுகள் வெடிக்க சொன்னவர்களை நான் கண்டிக்கிறேன்” என்றார்.
Powered by Blogger.