மேலும் 18 புள்ளிங்கோ அரஸ்ட் - தொடரும் பிகில் கைதுகள் - காவல் நிலையின் முன்பு பெற்றோர்கள் நிலையை பாருங்க..!


நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 25-ம் தேதி வெளியான "பிகில்" திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி தராவிட்டால் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு மாவுக்கட்டு போடப்போவதாக மிரட்டல் விடுத்த விஜய் ரசிகரின் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவியது. 

இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த விஜய் ரசிகர் பகிரங்க மன்னிப்பு கேட்டும், நான் செய்தது மிகப்பெரிய தவறு என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சியபடி ஒரு வீடியோவை வெளியிட்டார். 

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் ரகளையில் ஈடுபட்டதாக 7 சிறுவர்கள் உள்பட மேலும் 18 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈடுபட்டது தொடர்பாக ஏற்கனவே 32 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை வைத்து மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டனர். 

இதில் 7 சிறுவர்கள் உள்பட 18 விஜய் ரசிகர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி 7 சிறுவர்களும் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கவும், மீதமுள்ள 11 பேர் சிறையில் அடைக்குமாரும் கூறினார். 

ஒரு சாதரண சினிமாவுக்காக ரகளையில் ஈடுபட்ட தங்கள் பிள்ளைகள் கைது செய்து அழைத்து சென்ற காட்சியைக் கண்டு காவல் நிலைய வாசலில் பெற்றோர்கள் கண்ணீருடன் காத்திருந்தனர். 

அந்த, 18 போரையும் வேனில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டதும், பெற்றோர்கள் அழுது கொண்டே தங்கள் முகத்தை மூடியபடியே செல்லவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர். 

தற்போது வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் "பிகில்" படத்திற்காக ரகளை தொடர்பாக கைது செய்யப்பட்ட ரசிகர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
Powered by Blogger.