ரசிகர்களை கவர்ந்த நடிகை கோபிகா-வின் தற்போதைய நிலை - எப்படி இருக்கிறார் பாருங்க..? - இதோ புகைப்படம்


கேரளா மாநிலம் திரிச்சூரில் பிறந்தார் கேர்ளி ஆண்டோ. சினிமாவிற்காக தன் பெயரை கோபிகா என மாற்றிக்கொண்டார். தமிழில் 4 ஸ்டூடன்ட்ஸ் என்ற படத்தில் அறிமுகமான இந்த லஜ்ஜாவதி. இயக்குனர் சேரன் ஹீரோவாக நடித்த ஆட்டோகிராப் படத்தின் மூலம் ரசிகர்களை கட்டி போட்டார். 

இதனையடுத்து இவர் கனா கண்டேன், தொட்டி ஜெயா மற்றும் எம்.மகன் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர். சுமார் முப்பதுக்கும் அதிகமான படங்களில் கதாநாயகியாக நடித்த கோபிகா கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். 

சிறுவயதிலிருந்தே பரத நாட்டியம் கற்றவர். மேலும் இவர் உளவியல் சார்ந்த படிப்பான சைக்கலாஜியில் பட்டம் பெற்றிருந்தார். மிஸ்.திருச்சூர் பட்டதை வென்ற இவர் விமான பணி பெண்ணாக வேண்டும் என்று ஆசை மாடலின் துறைக்கு சென்று அங்கிருந்து நேராக சினிமா நடிகையாக வலம் வரத்தொடங்கினார். 


தொடர்ந்து படங்களில் குடும்பப்பாங்காக நடித்து வந்த இவர் நடிகர் ஸ்ரீகாந்தின் கனா கண்டேன் படத்தில் சற்றே கவர்ச்சியாக நடித்து இளசுகளை கிறங்கடித்தார்.


தொடர்ந்து, ஜூலை 17 ம் தேதி 2008-ம் ஆண்டு அஜிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதோடு இவர் சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். தற்போது இவர்களுக்கு எமி, எய்டன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கோபிகா குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். 

Powered by Blogger.