இதுக்கு விவேக்கின் "எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்..? கேள்வியே பரவாயில்ல..!" - ராதிகா கேட்ட கேள்விய பாருங்க..!


பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் கோடி ரூபாய் பணம் பரிசாக கிடைக்க வாய்ப்புள்ள கோடிஸ்வரி நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகள் மிகவும் முட்டாள் தனமாக இருப்பதாக் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தமிழ் தொலைக்காட்சியில் ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் அடிக்கடி சொல்லும் குற்றச்சாட்டாக போட்டியாளர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் மிகவும் முட்டாள் தனமாகவும் எளிதாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் இதுபோன்ற முட்டாள்தனமான கேள்வி கேட்பது பார்வையாளர்களை ஏமாற்றும் விதமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடினமான கேள்விகளை கேட்டால் பார்பவர்களுக்கு விடை தெரிகிறதோ இல்லையோ..? இறுதியில் என்ன விட என்றாவது தெரிந்து கொள்வார்கள். 

ஆனால், நான்காம் வகுப்பு பையனே எளிமையாக கண்டுபிடிக்கும் கேள்விகள் கேட்பது ரசிகர்களை முட்டாளாக்கும் செயல். இதற்கு, நடிகர் விவேக்கின் எடுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்..? கேள்வியே பரவாயில்லை போல இருக்கே என்று கூருவருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சரத்குமாரிடம் ராதிகா கேட்கும் கேள்வி ஒன்று அதை உண்மை என நம்பும் விதமாக அமைந்துள்ளது. 

அந்த கேள்வி என்னவென்று நீங்களே பாருங்க மக்களே..!


Powered by Blogger.