ஆள் அடையாளம் தெரியாமல் மெலிந்து போன சுப்ரமணியபுரம் சுவாதி - ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே


தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த சுவாதி, தமிழில் 'சுப்பிரமணியபுரம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்' என்கிற பாடலில் கண்ணை உருட்டி உருட்டி ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

இந்த படத்துக்காக இவருக்கு சிறந்த நடிக்காகான விருதுகளும் கிடைத்தது.இந்த படத்தை தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன் என பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார். 

அதே போல் தெலுங்கில் மூன்று பாடல்களையும் பாடியுள்ளார். ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார். 


அவ்வபோது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். உடல் மெலிந்து பள்ளிக்கூட மாணவி போல மாறியுள்ளார் அம்மணி. 


இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,

Powered by Blogger.