பைக்கில் படு மோசமான வசனம் - திரௌபதி இயக்குனரால் உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறை - அப்படி என்ன எழுதியிருந்தார்கள் தெரியுமா..?


இன்றைய காலகட்டத்தில் இளசுகளின் பெரிய கனவே ஒரு பைக்-கை சொந்தமாக்கி கொள்வது என்பதோடு நின்று விடுகிறது. அதனை தாண்டி பலரும் சிந்திப்பது கூட கிடையாது.

ஆனால், அந்த பைக்கை வாங்கி விட்டு அவர்கள் செய்யும் அளப்பரைக்கு இது தான் அளவு என்று இல்லை. இது என்ன பைக் என்றே கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொள்வது. கண்டகண்ட வசனங்களை எழுதிக்கொள்வது, ரேஸ் என்ற பெயரில் பொது மக்கள் பயன்படுத்தும் சாலையில் சர்...விர்.. என வேகமாக செல்வது என தொடர்கிறது.

அந்த வகையில், பாண்டிசேரியை சேர்ந்த ஒரு வாலிபர் தன்னுடைய பைக்கின் பின்புற மட் கார்டில் மிகவும் ஆபாசமான வசனம் ஒன்றை எழுதி சுற்றி திரிந்துள்ளார். இதனை, திரௌபதி படத்தின் இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர் வலை வாசிகள்.


அந்த புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்ரீ-ட்வீட் செய்ய, சம்பந்தப்பட்ட அந்த வாலிபரை பிடித்து ரிவிட் அடித்துள்ளது காவல் துறை. இது போன்ற நபர்கள் மீது உடனாடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

Powered by Blogger.