ரஜினிக்கு பிறகு 100 கோடி கிளப்பில் சேர்ந்தது விஜய் கிடையாது - இந்த முன்னணி நடிகர் தான்..! - எந்த படம் தெரியுமா..?


இன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் எளிதாக 100 கோடி என்ற இலக்கை அடைந்து விடுகின்றன. ஆனால், 2015-ம் ஆண்டுக்கு முன்னர் விஷயமே வேறு.

ஒரு படம் 100கோடி வசூல் செய்தால் ஆச்சரியம். ப்ளாக் பஸ்டர் ஹிட். அந்த வகையில், நடிகர் விஜய்-யை முதன் முதலில் 100 கோடி க்ளப்பிற்குள் அழைத்து சென்ற படம் துப்பாக்கி.

ரஜினிக்கு பிறகு விஜய் தான் 100 கோடி கிளப்பில் நுழைந்தவர் என்ற பேச்சு உள்ளது. ஆனால், அது உண்மையல்ல. ரஜினிக்கு பிறகு 100 கோடி கிளப்பில் நுழைந்தது சூர்யா தான்.

ஆம்,2011-ம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் உலக அளவில் 102 கோடி ரூபாய்களை வசூல் செய்தது என்பது குறிபிடத்தக்கது. அதனை தொடர்ந்து, 2012-ம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படம் 112 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது.


Powered by Blogger.