தன் மகனை நினைத்து கடும் சோகத்தில் நடிகர் விஜய்..!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் விஜய் தற்போது கொரோனாவால் சென்னையில் தான் இருந்து வருகிறார்.
இவரின் "மாஸ்டர்" படம் இணையதளத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பிறகு திரையரங்கிலேயே ரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது விஜய் மிகவும் சோகத்தில் இருக்கின்றாராம். ஆம், விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் படித்து வருகிறார். கொரோனாவால் சஞ்சய் அங்கேயே இருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் விஜய் தன் மகன் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்று அவரை நினைத்து மிகவும் சோகத்தில் உள்ளதாக பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். விஜய்யின் மகன் சஞ்சய்க்கு சினிமாவில் அதிகம் ஆர்வம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் விரைவில் சினிமாவிற்கு ஹீரோவாக வந்தாலும் ஆச்சரியமில்லை. ஏற்கனவே, பல முன்னணி இயக்குனர்கள் விஜய்யின் மகனுக்கு கதை எழுதி வைத்துள்ளார்கள் எனவும் முதல் படம் முருகதாஸ் இயக்கத்தில் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.