"ஓடிப்போ மானங்கெட்ட மனிஷாவே..." - ஒரே ஒரு டிவிட்டர் பதிவால் செருப்படி வாங்கும் மனிஷா கொய்ராலா..!
தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மனிஷா கொய்ராலா இந்தி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.
தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சாம்ராட் டாகல் என்பவரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். மனிஷா கொய்ராலாவுக்கு 2012-ல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு ஒட்டு மொத்த இந்தியர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் மனிஷா கொய்ராலா. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பது போல.
சமீபத்தில், நேபாள அரசு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியாவலி இன்று நேபாளத்தின்
புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டு பிரச்சனைக்குரிய களப்பணி மற்றும் லிபுலேக்
பகுதிகளை தந்திரமாக தன்னுடன் இணைத்து கொண்டது. இதனை பற்றி அமைச்சர் பிரதீப்
கியாவலி தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.
அதில், "நம்முடைய சிறிய நாட்டின் கௌரவத்தை காப்பாற்றியதற்கு நன்றி, மூன்று
நாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் மரியாதையான பேச்சுவார்த்தைகளை நாங்கள்
எதிர்நோக்கி காத்திருக்கின்றோம் " என அமைச்சரின் ட்விட்டிற்கு ரீட்விட்
செய்துள்ளார்.
இதனை பார்த்த இந்தியர்கள் கடும் கோபமடைந்து மனிஷா கொய்ராலாவை கண்டபடி விளாசி வருகிறார்கள். இந்தியாவின் சோற்றை தின்று விட்டு விசுவாசத்தை பக்கத்துக்கு நாட்டுக்கும், தங்களுடைய மதம் சார்ந்த நாட்டிற்கும் விசுவாசமாக இருப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகின்றது.
இதில், மனிஷா கொய்ராலாவும் தன்னை இணைத்துகொண்டுள்ளார். இது போன்ற காரியங்களில் ஈடுபட்டால் உங்கள் சொந்த நாடான நேபாளத்திற்கே ஓடிப்போய் விடு மனிஷா என்று காட்டமாக பதிலடி கொடுத்து வருகிறார்கள் இணைய வாசிகள்.