"இது நல்லதில்ல..." - கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக மீசை முறுக்கும் நடிகர் பிரசன்னா..!


தமிழகத்தில் ஒரு கூட்டம் வேண்டுமென்றே இந்து மதத்தை பற்றியும், இந்து மதக் கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். இது பற்றி எதுவும் கேட்டகாமல் எளிதாக இந்துக்களும் கடந்து சென்று கொண்டிருகிறார்கள்.

இதனுடைய வீரியம், விபரீதம் என்னவென்று அவர்கள் அறியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வருடா வருடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை நன்கொடை என்ற பெயரில் இந்தியாவிற்கு கொண்டு வந்துஇந்தியர்களை மதம் மாற்றி அவர்கள் மூலம் ஆட்சியையே மாற்றும் அளவுக்கான பல வேலைகள் 24x7 நடந்து வருகின்றன.

இது கூடாது என்று பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், அப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இறுதியில் மதவாதி என்ற பட்டத்தை தாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்நிலையில், சமீபத்தில் கறுப்பர் கூட்டம் என யு-டியூப் தளம் சமீபத்தில் சர்ச்சையை கிளப்பியது.

தமிழக இந்துக்கள் வணங்கும் தெய்வமான முருகனின் துதி பாடலான கந்த சஷ்டி கவசம் தொடர்பாக அவதூறு பரப்பி வருகின்றனர். இதற்கு நடிகர்கள் நட்டி எனும் நட்ராஜ் சுப்ரமணியம் மற்றும் பிரசன்னா ஆகியோர் சமூகவலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நட்டி நட்ராஜ் சுப்ரமணியம் டுவிட்டரில், ''போங்கடா முட்டாளுங்களா... முருகனை பத்தி சொல்ல, சிவனாலேயே முடியாதுடா.. என் ஜபம், கந்தர்ஷஷ்டி கவசம் என்னை காக்கும். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது... சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் கிடையாது... சரவணபவாய நமஹ... வெற்றிவேல் வீரவேல்'' என பதிவிட்டுள்ளார்.

மேலும் இவரை வசைபாடியவர்களுக்கும் செம பதிலடி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் பிரசன்னா ஒரு படி மேலே சென்று மீசை முருக்கியுள்ளார். அவர் தன்னுடைய டுவிட்டரில், 'எவரும் எவருடைய நம்பிக்கையையும் ஓரளவு கடந்து விமர்சிக்கிறேனென்று கொச்சைப்படுத்துவது பெரிதாய் பேசப்படும் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரை ஏன் கேட்பதில்லை எங்கிற வாதமும் பயன்தாராது.

அவரவர் நம்பிக்கை அவரவருக்கு பெரிது. அதை மதிக்க தெரியாத போக்கிரிகள் யாராயினும், எவருக்கெதிராயினும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும். மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மதநம்பிக்கையினும் அதிமுக்கியம்'. என பதிவிட்டுள்ளார்.
Powered by Blogger.