"முதல் 3 முறை கூப்பிட்டார்கள்... ஆனால், நான் விரும்பவில்லை.." - ஓப்பனாக பேசிய பூமிகா..!

 
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பூமிகா சாவ்லா. ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். விஜய்க்கு ஜோடியாகும் பத்ரி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
 
அது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாள மொழிப் படங்களிலும் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின்னரும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 
 
அந்த வகையில் தற்போது இவர் நீச்சல் உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களை ஷாக் ஆக்கியது. நான் பிரபல நடிகையாக இருந்தாலும் என்னை சுற்றி கேமராக்கள் இருப்பதை நான் விரும்புவதில்லை என்று பூமிகா கூறி இருக்கிறார். 
 
ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் பூமிகா இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது அதற்கு பூமிகா பதிலளித்துள்ளார். 
 
“போலி செய்திகள் அவை. என்னை பிக்பாஸில் இருந்து அழைக்கவில்லை. அப்படி அவர்கள் அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன். என்னை சீசன் 1, 2, 3 ஆகியவற்றில் பங்குகொள்ள அழைத்தார்கள், அதன்பிறகும் கூட அழைத்தார்கள். 
 
ஆனால் நான் செல்ல மறுத்துவிட்டேன். பூமிகா இந்த சீசனில் என்னை அழைக்கவில்லை. நான் தற்போதும் அதை ஏற்க மாட்டேன். நான் பிரபல நடிகையாக இருந்தாலும் என்னை சுற்றி கேமராக்கள் இருப்பதை நான் விரும்புவதில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.