கண்ணாடி போன்ற உடையில் நாற்காழியில் மல்லாக்க படுத்து.. செம்ம கிக்காக போஸ் கொடுத்த அதிதி ராவ்..!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகை அதிதி ராவ்.இப்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள அதிதி ராவ் முதன் முதலில் ஸ்ரீங்காரம் என்ற தமிழ் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.
இப்படம் தேசிய விருதையும் வென்றுள்ளது. அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த அதிதி ராவ் 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹேய் சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். சமீபகாலமாக படு கவர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என்னுடைய ஆடைகளை நான்தான் தேர்வு செய்வேன். அளவுக்கு அதிகமான கவர்ச்சி எனக்குப் பொருந்தாது. அணியும் ஆடைகளை வைத்து மதிப்பிடும் பழக்கம் இன்னும் நம்மிடம் இருக்கிறது.
என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். இந்த ஆண்டு தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி இருக்கிறேன். தமிழிலும், இந்தியிலும் இரண்டு படங்கள் நடித்து வருகிறேன். எனக்கு ஒரே நேரத்தில் நிறைய படங்கள் நடிக்கும் வழக்கம் இல்லை.
சினிமாவில் என்னுடைய பயணம் நிதானமாக தான் இருக்கும். இன்னும் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது. அதற்காக மார்க்கெட்டையே இழந்துட்டேன் என்றும், வாய்ப்புக்காக கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.
அசாத்திய நடிப்புக்கு நிகராக கவர்ச்சியையும் அள்ளித் தெளிக்கும் அதிதி இப்பொழுது மல்லாக்கப் படுத்துக் கொண்டு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.