"அல்வா டா புஜ்ஜு..." கஸ்தூரி போல மாராப்பை தூக்கி போட்டு பாறை மிது படுத்திருக்கும் அதிதி ராவ்..!

 
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகை அதிதி ராவ். பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹேய் சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். 
 
அசாத்திய நடிப்புக்கு நிகராக கவர்ச்சியையும் அள்ளித் தெளிக்கும் அதிதி இப்பொழுது மல்லாக்கப் படுத்துக் கொண்டு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள அதிதி ராவ் முதன் முதலில் ஸ்ரீங்காரம் என்ற தமிழ் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். 
 
இப்படம் தேசிய விருதையும் வென்றுள்ளது. அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த அதிதி ராவ் 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். ஏர்போர்ஸ் ஆபீஸருக்கும் ராணுவத்தில் பணிபுரியும் மருத்துவருக்கும் இடையேயான கட்டுக்கடங்காத காதலை ஆழமாக காட்டியிருந்த காற்று வெளியிடையில் அதிதி ராவ் நடிப்பை பலரும் பாராட்டினர்.
 
மேலும் அந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதையும் அதிதி பெற்றார். காற்று வெளியிடைக்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த அதிதி ராவ் அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் நடிக்க தொடங்கினார்.தமிழ்,இந்தியை தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வரும் அதிதி ராவ் கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் நடித்திருந்தார். 
 

இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இந்நிலையில், அமைதிப்படை அல்வாடா புஜ்ஜு.. காட்சியில் கஸ்தூரி படுத்திருப்பது போல மாரப்பை தூக்கி போட்டு விட்டு பாறை மீது படுத்திருக்கும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
Powered by Blogger.