"பொறந்ததுல இருந்தே இப்டிதானா.. இல்ல, அமாவாச.. பௌர்ணமிக்கு மட்டும் இப்படி ஆயிருவியா..?" - புலம்பும் ரசிகர்கள்..!

 
நடிகை ஆண்ட்ரியா பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை சமீப காலமாகவே தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இப்பொழுது உருவாகிவரும் பிசாசு பாகம் இரண்டில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 
 
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் ஆண்ட்ரியா இப்பொழுது பிகினி உடையில் சன்பாத் எடுத்த செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை புரட்டிப் போட்டுள்ளார். 
 
நடிகை ஆண்ட்ரியா , நயன்தாரா கீர்த்தி சுரேஷ், திரிஷா போன்ற முன்னணி கதாநாயகிகளின் பாணியில் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருகிறார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஏற்கனவே இவர் துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்து இருக்க இப்பொழுது அதை தொடர்ந்து பிசாசு இரண்டிலும் நடித்து வருகிறார். 
 
 
டார்க் ஜானரில் உருவாகும் படங்களுக்கு பெயர் போன மிஷ்கின் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வெளியான பிசாசு மிகப்பெரிய வெற்றிபெற்றது. பிசாசு பாகம் 1ன் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வர இதில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். 
 
 
திண்டுக்கல் மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பு முற்றிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்ட பணிகளும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக இருக்க இதில் ஆண்ட்ரியா பேயாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சந்தோஷ் பிரதாப் மற்றும் அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
 
 
விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாக உள்ளது. அதேசமயம் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை 3லும் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
 


சமீபகாலமாக பிகினி உடையில் ரசிகர்களை சூடேற்றி வரும் ஆண்ட்ரியா.. ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறார். இந்நிலையில், "பொறந்ததுல இருந்தே இப்டிதானா.. இல்ல, அமாவாச.. பௌர்ணமிக்கு மட்டும் இப்படி ஆயிருவியா..?" என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
Powered by Blogger.